• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வறட்சியால் பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள்
- கடந்த இரண்டு (02) மாத காலப்பகுதிக்குள் நிலவிய வறட்சி காரணமாக நீரேந்து பிரதேசங்களில் நீரின் அளவு குறைவடைந்தமையினால் உரிய குடிநீர் விநியோகத்தின் போது 54 நீர்வழங்கல் முறைகள் சம்பந்தமாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இதன் காரணமாக குழாய் ஊடாக போதுமான அளவு நீர் விநியோகம் கிடைக்கப்பெறாத நுகர்வோருக்கு தடையின்றி நீர் வழங்குவதற்கு சுமார் 70 பவுசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள தெனவும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு 24 மணித்தியாலமும் நீர் வழங்குவதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சகல வலய அலுவலகங்கள் சார்பிலும் விசேட குழுவொன்று வீதம் நியமிக்கப்பட்டுள்ளதென்பதுவும் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு ஊடகங்களின் மூலம் பொது மக்களுக்கு அறியச் செய்விக்கப்பட்டுள்ளதெனவும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.