• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மூலதனச் சந்தை திறமுறை - 2016 - 2020
- உலகம் முழுவதும் முக்கியமாக வளர்ச்சி்யடைந்து வரும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் நிலைபேறுடைய அபிவிருத்திக்கும் முக்கிய பங்கினை மூலதனச் சந்தை மூலம் நிறைவேற்றப்படுகின்றது. ஆயினும் இலங்கையில் மூலதனச் சந்தையின் பயன் இதுவரை உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை. ஆதலால், அனைவருக்கும் சமமாக செயலாற்றக்கூடிய சூழலொன்றை நிருமாணிப்பதன் மூலம் பங்குகளை வழங்குபவர்கள், முதலீட்டாளர்கள், சந்தை நிறுவனங்கள் சந்தை இடையீட்டாளர்கள் ஆகியோர்களுக்கு இடையில் நம்பிக்கையையும் தெளிவையும் உருவாக்கி இலங்கை மூலதனச் சந்தையை பலம்மிக்க வினைத்திறன் கொண்ட அத்துடன் சுறுசுறுப்பான சந்தையொன்றாக அபிவிருத்தி செய்வது அத்தியாவசியமானதாகும். அதற்கான பின்னணியை உருவாக்கும் நோக்கிலும் இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ள ஒழுங்குறுத்துகை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்மொழியப்பட்டுள்ள "மூலதனச் சந்தை திறமுறை - 2016 - 2020” ஐ இணங்கியொழுகும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.