2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்துசமுத்திர வலயத்தில் தேடல் மற்றும் மீட்பு சேவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு பணிகளுக்காக இந்துசமுத்திர ஒத்துழைப்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - விபத்துக்களுக்குள்ளானவர்களை தேடும் போதும் மீட்கும் போதும் இந்துசமுத்திர வலயத்தில் ஆகாய மார்க்கமாகவும் கடல்மார்க்கமாகவும் செய்யப்படும் தேடல் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக கட்டமைப்பொன்றைத் தாபிப்பதற்கும் அதன் போது இந்துசமுத்திர வலயத்திலுள்ள நாடுகளினால் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உறுப்பு நாடுகளுக்கிடையில் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கும் இந்துசமுத்திர வலய தேடல் மற்றும் மீட்பு செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு சார்பில் இந்துசமுத்திர ஒத்துழைப்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |