2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரஜரட்டையை எழுச்சிபெறச் செய்தல் - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - "பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்" எனும் மாவட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள் 2016 - 2020 - அதிமேதகைய சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் மீது நடைமுறைப்படுத்தப்படும் "பொலன்நறுவையை எழுச்சிபெறச் செய்வோம்" எனும் மாவட்ட அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் பொலன்நறுவை புதிய நகரத்தில் உத்தேச அரசாங்க சேவையாளர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி மற்றும் நிருவாக கட்டடத்தொகுதி நிருமாணிப்பு, கதுருவெல நகர அபிவிருத்தி சார்பில் புகையிரத உத்தியோகபூர்வ வீடுகளை மீள நிருமாணித்தல், தமன்கடுவ பிரதேச சபை கட்டடத்தை பொலன்நறுவை புதிய நகரத்தில் நிருமாணித்தல் போன்ற நான்கு விசேட கருத்திட்டங்களுக்கான கட்டமைக்கப்பட்ட பொறியியல் வடிவமைப்பு பணிகள் மற்றும் நிருமாணிப்பு பணிகள் 4,120 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட செலவில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் / மத்திய பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பனிக்கும் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |