2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தை கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருதல் - ஒலுவில் கடற்றொழில் துறைமுகமானது கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி தொழிலுக்காக நிருமாணிக்கப்பட்ட பெரிய கடற்றொழில் துறைமுகமாகுமென்பதோடு, அது 3.5 மீற்றர் துறைமுக ஆழத்தைக் கொண்ட பலநாள் மீன்பிடி படகுகள் பாரிய எண்ணிக்கையில் நங்கூரமிடும் வசதிகளும் எனைய மீன்பிடி துறைமுகம் ஒன்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளது. மீன் பதனிடல் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளும் கடற்றொழில் துறைமுகத்தை கேந்திரப்படுத்தி ஏற்றுமதி கடற்றொழில் மற்றும் மீன் பதனிடல் தொழிலை விருத்தி செய்யும் உயர் வாய்ப்பு நிலவுகின்றது. கிழக்கு மாகாணத்தின் கடற்றொழிலை விரிவாக அபிவிருத்தி செய்வதற்கும் இந்த துறைமுகத்தை வர்த்தக ரீதியில் இலாம் ஈட்டும் துறைமுகமொன்றாக மாற்றும் நோக்கில் தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையினால் நிருவகிக்கப்படும் ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தை கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |