• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்வதற்கான வழிமுறையொன்றை வகுத்தமைத்தல்
- நாட்டில் அரசி விலையை நிலையாக பேணுவதற்கும் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்துக்கு சொந்தமான பன்னேகமுவவிலும் ஹிங்குரக்கொடவிலும் உள்ள அரசி ஆலைகளை தொடர்ச்சியாக செயற்படுத்தும் நோக்குடன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்துக்கு நெல் வழங்கி, மேற்குறிப்பிட்ட அரசி ஆலைகள் இரண்டின் ஊடாகவும் தனியார் அரசி ஆலைகள் ஊடாகவும் இந்த நெற் தொகையினை அரசியாக்கி கூட்டுறவு மொாத்த வியாபார நிறுவனம், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொகை வர்த்தகர்கள் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கும் பொருட்டு வழிமுறையொன்றை தயாரிப்பதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.