2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் எதிரிடையான கழிவுப் பொருட்கள், சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்றுதல் வரி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சட்டம் இயற்றுதல் - சில நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அநீதியான வர்த்தக நடைமுறைகளுக்கு முகங்கொடுப்பதற்கும் அதேபோன்று கட்டுப்பாடின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலிருந்து உள்நாட்டு கைத்தொழிலையும் உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உ்ணமையான பெறுமதியைவிட குறைந்த விலையில் சந்தைக்கு உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக "எதிரிடையான வரி" மற்றும் வெளிநாட்டு' அரசாங்கங்களினால் வழங்கப்படும் பல்வேறுபட்ட மானியங்கள் காரணமாக அசாதாரணமாக குறைந்த விலைக்கு உள்நாட்டு சந்தையில் இறக்குமதிப் பொருட்கள் வருவதற்கு எதிராக "சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்றுதல் வரி" விதித்தலும் புலனாய்வு செய்யும் பொருட்டிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி "எதிரிடையான வரி மற்றும் சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்றுதல் வரி சட்டமூலம்" மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகள் சம்பந்தமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சட்டம் இயற்றும் மற்றும் புலனாய்வு செய்யும் ஏற்பாடுகள் செய்யப்படும் "பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டமூலம்" சட்டமா அதிபரின் அங்கீகாரத்துக்கு உட்பட்டு, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |