2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வனவுயிர் வலயங்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல் - காட்டு யானைகள் செல்லும் பாதைகளில் வசிக்கும் மக்களை மூன்று கட்டங்களின் கீழ் அப்புறப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முதலாம் கட்டத்தில் வடமேல், ஊவா மற்றும் தெற்கு ஆகிய மூன்று வலயங்களிலும் காட்டு யானைகள் செல்லும் பாதைகள், காட்டு யானைகள் - மனித மோதல் கடுமையாக நிலவும் பிரதேசங்களாக வனவுயிர் திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட பிரதேசங்களுக்குரிய அடிப்படை ஆய்வுப் பணிகளும் மக்களுக்கு அறியச் செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தும் பணியும் இவை தொடர்பில் அனுபவம் மிக்க நிறுவனமொன்றான வனவுயிர் நம்பிக்கை பொறுப்புக்கு கையளிப்பதற்கும் வனவுயிர் பாதுகாப்பிற்குரிய அவசர மற்றும் முன்னுரிமை பணிகளை இந்த நம்பிக்கை பொறுப்பின் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|