• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் 2017 சருவதேச வெசாக் தின விழாவையும் மாநாட்டையும் இலங்கையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தல்
- ஐக்கிய நாடுகளின் பங்களிப்புடன் 2017 ஆம் ஆண்டில் நடாத்தப்படும் சர்வதேச வெசாக் தின விழாவையும் மாநாட்டையும் இலங்கையில் நடாத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தலைவர்கள் பலர் அடங்கலாக 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். அதேபோன்று பௌத்த வழிகாட்டல் தொடர்பில் ஆர்வத்தினை நாட்டில் உருவாக்குவதற்கும் தேரவாத பௌத்த மதத்தின் கேந்திர நிலையமாக இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய சர்வதேச கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் உறுதி செய்யும் பொருட்டும் இந்த வாய்ப்பு பேருதவியாக அமையும். இதற்கமைவாக 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவையும் மாநாட்டையும் இலங்கையில் நடாத்துவதற்குரிய பணிகளை ஒழுங்கு செய்வதற்குத் தேவையான நிதியினைக் குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ ,அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.