• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளவர்கள் விசா அனுமதியைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பது தொடர்பில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- தத்தமது அரசாங்கங்கள் சார்பில் உத்தியோகபூர்வ தூதரகப் பணிகளில் ஈடுபடும் இலங்கையர்களுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பயணங்களை மேற்கொள்வதற்கான வசதிகளைச் செய்து இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ்சுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை விருத்தி செய்யும் நோக்கில் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ள இரண்டு நாட்டையும் சேர்ந்த பிரசைகளுக்கு 30 நாட்களை விஞ்சாத ஒரு காலப்பகுதிக்கு மற்றைய தரப்பைச் சேர்ந்த நாட்டிற்குச் செல்தல், அதன் ஊடாக பயணங்களை மேற்கொள்ளல் மற்றும் தங்கியிருத்தல் போன்றவற்றுக்கு விசா பெற்றுக் கொள்ளும் தேவையிலிருந்து விலக்களிக்கும் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் பிலிப்பைன்ஸ் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.