• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
- களுத்துறை மாவட்டத்திலுள்ள பெரிய வைத்தியசாலை யொன்றான களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊடாக இரத்தினபுரி மற்றும் காலி போன்ற அடுத்தடுத்த மாவட்டங்களிலிருந்து வருகைதரும் நோயாளிகளுக்கும் சுகாதார சேவை வழங்கப்படுகின்றது. கடந்த பல வருடங்களினுள் இந்த வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, தரம்மிக்க நோயாளர் சிகிச்சை சேவையொன்றை வழங்குவதற்கு அதன் வசதிகளை விருத்தி செய்யவேண்டியுள்ளது. இதற்கமைவாக களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவர்களுக்கான காவறைத்தொகுதி, நிருவாகக் கட்டடம், பதவியினருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் மருந்துக் களஞ்சியம் போன்றவற்றை 4,121 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.