• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"கிராம ராஜ்ஜிய" அலகுகளைத் தாபிப்பதற்கான வரைவு கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும்
- அபவிருத்தி செயற்பாட்டிற்காக மக்களின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு நாடுமுழுவதும் 2,500 “கிராம ராஜ்ஜிய" அலகுகளைத் தாபிக்கும் பிரேரிப்பொன்று 2015 பொது தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட "ஐந்து வகைத் திட்டம்" கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக, “கிராம ராஜ்ஜிய" அலகுகளைத் தாபிப்பதற்கான கருதுகோள் பத்திரமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக கல்விமான்கள், இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினால் வரைவு கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும் மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த கருதுகோள் பத்திரம் மற்றும் கட்டமைப்புத் தொடர்பில் மேலும் கலந்துரையாடும் பொருட்டு உள்ளக நிருவாகம் மற்றும் அரசாங்க முகாமைத்துவம் பற்றிய பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவுக்குத் தொடர்புபடுத்துவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.