• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிகாரம் கையளித்தல் (பிரதேச செயலாளர்கள்) (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
- மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுவது அத்தியாவசியமானதென அவதானிக்கப்பட்டது. இதற்கமைவாக மாவட்ட மற்றும் பிரதேச நிருவாகத்தில் 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க அதிகாரம் கையளித்தல் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தை மிக பயனுள்ள வகையிலும் வௌிப்படையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு வரையப்பட்டுள்ள "அதிகாரம் கையளித்தல் (பிரதேச செயலாளர்கள்) (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை" அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.