• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்து வதற்கு உரியதான கொள்கையும் சட்டக் கட்டமைப்பும்
- பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும் அது சம்பந்தமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் போதுமான ஏற்பாடுகளைச் செய்தும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையினால் நிறைவு செய்யப்பட வேண்டிய பொறுப்புக்களுக்கு அமைவாக செயற்படுகின்றமையை உறுதி செய்யும் பொருட்டு, தற்போது நடைமுறையிலுள்ள "பயங்கரவாத ஒழிப்பு சட்டத்திற்கு“ பதிலாக பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்து வதற்கான கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பினை வரைவதற்காக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கமைவாக, இந்தக் குழுவினால் வரையப்பட்டுள்ள மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு பற்றி மேலும் கலந்துரையாடும் பொருட்டு தேசிய பாதுகாப்புப் பற்றிய பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவுக்குத் தொடர்புபடுத்துவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.