• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியிலும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியிலும் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்தல்
- நாடு முழுவதும் உள்ள சகல கிராமங்களையும் தழுவி 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் 332 பிரதேச செயலகப் பிரிவுகளும் தாபிக்கப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர், குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் போன்ற ஐந்து வகுதியைச் சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் பல்வேறுபட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 வெளிக்கள உத்தியோகத்தர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பயனுள்ள வகையிலும் நிருமாண ரீதியிலும் தேசிய அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்ளும் நோக்கில் "இணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை" அமுல்படுத்துவது பற்றிய பிரேரிப்புகள் மற்றும் சிபாரிசுகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.