2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆழ்கடலில் மணல் அகழ்தல் மூலம் மாரவில கரையோர மணல் ஊட்ட கருத்திட்டம் இரண்டாம் கட்டம் - இலங்கையில் தற்போது மிகவும் கடுமையான கடல் அரிப்பு நிலைமை பதிவு செய்யப்பட்டுள்ள மாரவில பிரதேசத்தின் கடல் அரிப்பு நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் கரையோரத்தை பேணும் பொருட்டும் ஆழ்கடலில் மணல் அகழ்தல் மூலம் கரையோர மீள்ஊட்டல் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவைினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்திற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|