• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகாணங்களுக்கிடையிலான விடயக் கூட்டிணைப்பு
- அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வரிசை அமைச்சுகளுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் முறையான கூட்டிணைப்பினை பேணுவதன் மூலம் பணிகள் இரட்டிப்பாகாமல் ஆகக்கூடிய பயன்பெறும் விதத்தில் வளங்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கமைவாக, வரிசை அமைச்சுக்களுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் சிறந்த கூட்டிணைப்பினை பேணுவதற்காக அந்தந்த மாகாண அமைச்சுக்கள் மாகாண சபைகளுடன் சுயாதீனமாக செயலாற்றுவதற்குப் பதிலாக பிரதான செயலாளர்களுக்கும் வரிசை அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையிலான கூட்டமொன்றை இரண்டு மாதங்களுக்கு ஒருதடவை கொழும்பில் நடாத்துவதற்கும் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடவடிக்கை எடுப்பதற்குமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.