2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க பல்கலைக்கழகங்களினதும் உயர்கல்வி நிறுவனங்களினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் - அரசாங்க பல்கலைக்கழகங்களில் நிலவும் இடவசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை விருத்தி செய்து, தற்போது அவற்றில் கல்வி கற்கும் மாணவர்களினதும் எதிர்காலத்தில் தொழினுட்ப பட்டம் உட்பட ஏனைய பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் தேவைகளை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் உயர் முன்னுரிமை வழங்கியுள்ளது. இதற்கமைவாக கொழும்பு, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, ருகுணு, சப்பிரகமுவ, பேராதனை, வடமேல், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகங்களினதும் கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத நிறுவனத்தினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |