2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழினுட்ப பாடங்களை கற்கும் மாணவர்களுக்காக தேசிய கல்வியியல் கல்லூரியொன்றைத் தாபித்தல் - ஏற்கனவே தொழினுட்ப பாடங்கள் பாடசாலை முறைமையினுள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதற்குத் தேவையான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக தேசிய மட்டத்தில் தொழிலுட்ப கல்விக் கல்லூரியொன்று இற்றைவரை தாபிக்கப்படவில்லை. இதற்கமைவாக கொரிய குடியரசின் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையினால் வழங்கப்படவுள்ள 1,911 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியுதவியைப் பயன்படுத்தி தொழினுட்பத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியொன்றை குளியாப்பிட்டியவில் தாபிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |