• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீதாவக்கை கங்கை நீர் மின் உற்பத்திக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
- இலங்கையில் மின் பிறப்பாக்கல் திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ள 20 மெகாவோட் ஆற்றலைக் கொண்ட உத்தேச சீதாவக்கை கங்கை நீர் மின் உற்பத்திக் கருத்திட்டத்தின் மூலம் 50 கிகாவோட் 50 மணித்தியாலயம் வருடாந்தம் தேசிய மின்சார முறைமையில் சேர்க்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தை கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட பிரதேச செயலகப் பிரிவின் ஹிங்குரல்ல கந்த கிராமத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிபுணத்துவ சேவைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.