• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிலற்ற பட்டதாரிகளை திறன் மற்றும் முகாமைத்து ஆற்றலுடன் பெருந்தோட்டத் துறையில் ஈடுபடுத்துதல்
- வருடாந்தம் இலங்கை பலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரி இளைஞர் யுவதிகள் பெருமளவானோர் கணிசமான ஒரு காலம் தொழிலின்றி அல்லது குறைந்த தொழில் நிலைகளில் இருப்பது அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. ஆயினும், பட்டத்தை அடிப்படை தகைமையாக கருதும் தனியார் துறையில் சில துறைகளுக்கான பதவிகளும் வெற்றிடமாக உள்ளமை அவதானிக்கப்பட்டது. இதற்கமைவாக பட்டத்தை தகைமையாக தேவைப்படுத்தப்பட்டுள்ள பதவிகளுக்கு வெற்றிடம் நிலவும் பெருந்தோட்டத் துறையின் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் முகாமையாளர் பதவிகளுக்கு தொழிலற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் சாத்தியம் நிலவுகின்றதோடு, அதற்காக தொழிலற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வதிவிட பயிற்சி நெறியொன்று தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் ஆரம்பிக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.