2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உத்தேச கொழும்பு கோட்டை அபிவிருத்திக் கருத்திட்டம் (நடைபாதை வலையமைப்பு மற்றும் வர்த்தக நிலையங்களை மீள நிறுவுதலும்) - முறையற்ற அபிவிருத்தி அத்துமீறிய நிருமாணிப்புகள் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்கள் கடும் நெரிசல் கூடிய பிரதேசங்களாக மாறியுள்ளன. இந்த அத்துமீறிய நிருமாணிப்புகள் காரணமாக அபிவிருத்தி செய்யப்படாததும் மக்களின் பாவனைக்கு எடுக்கமுடியாத நிலையில் நகர மத்தியில் எஞ்சியுள்ளதுமான காணித்து துண்டுகளை முறையான அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் பேரே ஏரிக்குமிடையில் டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலிருந்து ஒல்கொட் மாவத்தை வரையிலுள்ள காணியினுள்ளும் ஒல்கொட் மாவத்தையிலிருந்து சமுத்திர மாவத்தை வரை செல்லும் பாதையினுள்ளும் 44 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் உடற்பயிற்சி மெல்லோட்ட பாதைகள் இரண்டினை நிருமாணிப்பதற்கும் ஒல்கொட் மாவத்தையின் நடைபாதையை முறைப்படுத்தும் நோக்கில் அப்புறப்படுத்தப்பட்ட விற்பனை நிலையங்களை 22 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட செலவில் மீள நிறுவுவதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |