2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புலம்பெயர் நடவடிக்கைகள் தொடர்பில் சுவிஸ் சமஷ்டி பேரவைக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் ஒத்துழைப்பு உடன்படிக்கை - முறையற்ற புலம்பெயர்கை மற்றும் அதுசார்ந்த குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு உரியதாக இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கிலும் அதேபோன்று புலம்பெயர்பவர்களின் உரிமைகளை நியாயமாக பாதுகாப்பதற்கும் சட்டவிரோதமாக வேறு நாடொன்றில் தங்கியிருப்பவர்களை கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் அவர்களுடைய நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பினை வழங்குவதற்காகவும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் சுவிஸ் சமஷ்டி பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புலம்பெயர் நடவடிக்கைகள் தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் இந்த உடின்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |