• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பில் 2016‑08‑31 ஆம் திகதியன்றுக்கான முன்னேற்றம்
- கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலக அதிகாரபிரதேசத்தில் சாலாவ இராணுவ முகாமில் 2016‑06‑05 ஆம் திகதியன்று நிகழ்ந்த ஆயுத களஞ்சியம் வெடித்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்தல், 2016 மே மாதம் 10 திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கேகாலை மாவட்டத்தில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்தல் 2016 மே மாதம் 10 ஆம் திகதியன்று ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தநிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்தல் சம்பந்தமாக 2016 ஆகஸ்ட் மாத இறுதியில் பெற்றுள்ள முன்னேற்றம் பற்றி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

* சாலாவ பிரதேசத்திலிருந்த இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியம் வெடித்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே 422.85 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடு கொழும்பு மாவட்ட செயலாளருக்கு விடுவிக்கப்பட்டுள்ளதோடு, வீடுகள் சேதமடைந்தவர்கள் மீள அவர்களுடைய வீடுகளில் குடியேறும் வரை மாதமொன்றுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் பாதிக்கப்பட்ட சுயதொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ஆகியவற்றை வழங்குவதற்கும் வீட்டு சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் இந்த நிதி ஏற்பாடானது செலவு செய்யப்பட்டுள்ளது.

* 2016 மே மாதம் 10 திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கேகாலை மாவட்டத்தில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 9,588 குடும்பங்களைச் சேர்ந்த 34,653 பேர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு கேகாலை மாவட்ட செயலகத்துக்கு பல சந்தர்ப்பங்களில் நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவதானம் மிக்க நிலைமையின் கீழ் மீளக்குடியமர்த்துவதற்கு சிபாரிசு செய்யப்படுள்ள குடும்பங்களுக்குத் தேவையான 145 வீடுகளை தனியார்துறையின் பங்களிப்புடன் நிருமாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

* 2016 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தநிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட 142,942 குடும்பங்களைச் சேர்ந்த 586,731 பேர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு இயற்கை அனர்த்தத்திற்கான தேசிய காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 586.79 மில்லியன் ரூபாவும் தேசிய காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 149.02 மில்லியன் ரூபாவும் பொதுத் திறைசேரியின் நிதி ஏற்பாடுகளின் கீழ் 111.21 மில்லியன் ரூபாவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.