2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பசுமை சக்தி அபிவிருத்தியையும் வலுசக்தி வினைத்திறனையும் மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - மின்சார அணுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மத்திய வோல்ட்டேஜ் வலையமைப்பின் வினைத்திறனை அதிகரித்தல் Smart Grid and metering என்னும் முன்னோடி துணைக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சக்தி வினைத்திறனை அதிகரிப்பதற்கான கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மின்சார முகாமைத்துவ மேம்பாடு என்னும் அங்கத்துடன் பசுமை சக்தி அபிவிருத்தியையும் வினைத்திறனையும் மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |