2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
போகம்பர சிறைச்சாலை மனையிடத்தை மீள் அபிவிருத்தி செய்தல் - கண்டி நகரத்தில் இருந்த போகம்பர சிறைச்சாலையை பல்லேகலே பிரதேசத்திற்கு இடம்நகர்த்தியதன் காரணமாக தற்போது வெற்றிடமாகவுள்ள சுமார் 5 ஹெக்டயார் விஸ்தீரணம் கொண்ட போகம்பர சிறைச்சாலை காணியை அதன் வரலாற்று ரீதியிலான பெறுமதியினை பாதுகாக்கும் விதத்திலும் சுற்றுலா கேந்திர நிலையமொன்றாக மீள் அபிவிருத்தி செய்வதற்கும் இத்தகைய மீள் நிருமாணிப்பு பணிகளில் நிபுணத்துவம் கொண்ட பெயர்பெற்ற சர்வதேச நிறுவனமொன்றுக்கு கையளிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |