• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் மீளாய்வு
- அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டமானது இந்த அரசாங்கத்தின் கீழ் இதுவரை 2014/2015 பெரும்போகம், 2015 சிறுபோகம் மற்றும் 2015 / 2016 பெரும்போகம் ஆகிய போகங்கள் மூன்றின் போதும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன், 2015 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட நெற் தொகையில் மீதியாகவுள்ள தொகையை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவு வழிகாட்டலை பின்பற்றி 2016 சிறுபோகத்திற்கான அறுவடை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அப்புறப்படுத்து வதற்கும் 2016 ஆம் ஆண்டிலே கொள்வனவு செய்யப்பட்டு நெற் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியங்களின் திரட்டிவைக்கப்பட்டுள்ள நெற் தொகைகளை நெல்லுக்கான உயர் விலை பதிவு செய்யும் ஒக்ரோபர் மற்றும் நவெம்பர் மாதங்களில் வழங்குவதற்கும் இவ்வாறு நெல் வழங்கப்படுவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் பணத் தொகைகளை பயன்படுத்தி பொதுத் திறைசேரிக்கு செலுத்தவேண்டிய நிலுவைகளை தீர்வை செய்வதற்கும் நெல் கொள்வனவு செய்வதற்குரியதாக அரசாங்க வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்துவதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகள் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.