2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் திணைக்களத்தை மறுசீரமைத்தலும் தொழில் உத்தியோகத்தர் களுக்கு புதிய சேவைப் பிரமாணக் குறிப்பை தயாரித்தலும் - நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தனியார் துறையினால் பாரிய பங்களிப்பு வழங்கப்படுகின்றதோடு, இந்த துறையின் சேவைகளை வினைத்திறனுடனும் சிறப்பாகவும் பெற்றுக் கொள்வதற்குத் தேவைப்படும் தொழில் ரீதியான சமாதானத்தைப் பேணுவதற்கு தொழில் திணைக்களமானது குறிப்பிடத்தக்க பணிகளை நிறைவேற்றி வருகின்றது. இந்த திணைக்களத்தின் சேவையை வினைத்திறனுடனும் சிறப்பாகவும் வழங்கும் போது எழும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அதனை நடைமுறைக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பதற்கான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்று தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் குழுவினால் சிபாரிசுகள் வழங்கும் பணியானது கடைசி கட்டத்தில் நிலவுகின்றது. இதற்கு ஒருங்கிணைவாக தொழில் திணைக்களத்தின் தொழில் உத்தியோகத்தர்களின் சேவை நிலையினை மேம்படுத்தும் பொருட்டு தொழில் உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பொன்றைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த அமைச்சினதும் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்கள் அடங்கிய உத்தியோகத்தர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மேற்போந்த இரண்டு குழுக்களினதும் அறிக்கைகள் அண்மையில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுமென தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |