• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டாக்காலி நாய்களினால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்த்தல்
- கட்டாக்காலி நாய்களினால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு பொருத்தமான வழி முறையை தயாரிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் நாய்களின் தொகைகளை கட்டுபடுத்துதல் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறமையுடன் மேற்கொள்தல், நாய்களை தடுத்து வைக்கும் நிலையங்களைத் தாபித்தல், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் எனைய நிறுவனங்களுக்கிடையில் இது தொடர்பில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் போன்ற துறைகளுக்கு கவனம் செலுத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளைக் கொண்ட செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.