2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திரிபோஷ உற்பத்திக்காக சோயா அவரை கொள்வனவு செய்தல் - இலங்கையின் வருடாந்த சோயா அவரை தேவையானது சுமார் 220,000 மெற்றிக்தொன்களாவதோடு, நாட்டில் பொதுவாக உற்பத்தி செய்யப்படுவது சுமார் 22,500 மெற்றிக்தொன் சோயா அவரையாகும். சோயா அவரை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் ஆகக்கூடிய முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2016 ஆம் சிறுபோகத்தில் மகாவலி வலயம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி சுமார் 4,000 ஹெக்டயார் பூமி பிரதேசத்தில் சோயா அவரை பயிர் செய்யப்பட்டுள்ளதோடு, அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் அறுவடையானது சுமார் 8,000 மெற்றிக்தொன்களாகும். உள்நாட்டு விவசாயிகளை பாதுகாத்து மேலதிக உணவுப் பயிர்ச் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்பார்க்கப்படும் அறுவடையின் சுமார் 5,000 மெற்றிக்தொன் சோயா அவரையை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து தேசிய திரிபோஷ உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |