• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை பனாபிட்டியவிலுள்ள நன்நீர் மீன் சினையூட்டல் நிலையத்தை தேசிய நீரகவளமூல ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கு நிரந்தரமாக உடைமையாக்குதல்
- வளர்ப்பு மீன் கைத்தொழிலில் தொழில்வாய்ப்புகளை பிறப்பிப்பதற்கு கணிசமான பங்களிப்பு வழங்கக்கூடிய உயர் பயனுள்ள துறையொன்றாவதோடு, தேசிய நீரகவளமூல ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையினால் வளர்ப்பு மீன் கைத்தொழிலுக்குரியதான ஆராய்ச்சிப் பணிகளை வெற்றிகரமாக செய்து வருகின்றது. தற்போது இலங்கை தேசிய நீரகவளமூல அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தான களுத்துறை பனாபிட்டியவிலுள்ள நன்நீர் மீன் சினையூட்டல் நிலையத்தை அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விருத்தி செய்து வளர்ப்பு மீன் கைத்தொழிலுக்குரிய ஆராய்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் நாரா நிறுவனத்திற்கு நிரந்தரமாக உடைமையாக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.