2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கேகாலை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட்ட கிராமங்களுக்கு நீர்வழங்கல் வசதிகளை பெற்றுக் கொடுத்தல் - மண்சரிவு காரணமாகவும் மண்சரிவு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதன் காரணமாகவும் கேகாலை மாவட்டத்தில் சுமார் 2,000 குடும்பங்கள் அவர்களுடைய வீடுகள் அழிந்துபோய் அல்லது அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதன் விளைவாக 65 இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த இடம்பெயர்ந்த மக்களை கேகாலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் மீளக் குடியமர்த்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மீளக் குடியமர்த்துவதற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள 45 இடங்களுக்கு நீர்விநியோக வசதிகளை துரிதமாக ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இதற்கமைவாக தேவையான நீர்வழங்கல் வசதிகளை 455 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட ஆகுசெலவில் செய்யும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |