2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலஞ்சென்ற ராமாஞ்ச மஹா நிக்காயவின் துணை பிரதான ஆலோசகரும் அதி வணக்கத்திற்குரிய நாஉயனே ஆரியதம்ம தேரோ அவர்களின் இறுதிக் கிரியைகளை அரசாங்க அனுசரணையில் நடாத்துதல் - காலஞ்சென்ற ராமாஞ்ச மஹா நிக்காயவின் துணை பிரதான ஆலோசகரும் ஶ்ரீ கல்யாணி யோகாஸ்ரம சன்ஸ்தா பிரதான ஆலோசகருமான மஹா கம்மட்டானாசார்ய மஹோபாத்திய திறிபீட்டாக்காசார்ய அதி வணக்கத்திற்குரிய நாஉயனே ஆரியதம்ம தேரோ அவர்கள் தேசிய, மத மற்றும் சாசன ரீதியில் இலங்கைக்கு ஆற்றிய உன்னத சேவையை மெச்சி அன்னாரின் இறுதிக் கிரியைகளை அரசாங்க அனுசரணையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |