2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாணந்துறை பிரதேச செயலகத்திற்குப் புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல் - களுத்துறை மாவட்டத்திற்குரிய பாணந்துறை பிரதேச செயலகப்பிரிவு 72 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, சுமார் 205,969 பேர்கள் இங்கு வசிக்கின்றார்கள். இந்த பிரதேச செயலகம் நடாத்திச் செல்லப்படும் கட்டடங்களில் இடவசதி போதாமை காரணமாக இங்கு சேவைநாடி நாளாந்தம் வரும் பொதுமக்களுக்கும் இந்த அலுவலகத்தில் சேவை புரியும் உத்தியோகத்தர்களுக்கும் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கமைவாக, பாணந்துறை பிரதேச செயலகத்துக்கு வசதிகளுடனான புதிய கட்டடமொன்றை 172.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |