2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் - தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் மாகாண சபைகளுக்கான விடயநோக்கெல்லையின் கீழுள்ள நாடு முழுவதிலுமுள்ள இனங்காணப்பட்ட பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடைமுறைப்ப டுத்தப்படும் "பாடசாலை கணனி ஆய்வுகூடக் கருத்திட்டம்" சார்பிலும் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப வள முகாமைத்துவம் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட நிருவாகங்களுடன் ஒருங்கிணைந்து செல்லும் பிரதான நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் "மாவட்ட தகவல் தொழினுட்ப வள நிலையக் கருத்திட்டம்" சார்பில் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள முறையே 250 மில்லியன் ரூபாவையும் 42 மில்லியன் ரூபாவையும் பயன்படுத்தி இந்த இரு கருத்திட்டங்களையும் நடைமுறைப் படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |