• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிஹிந்தலை நகர மத்தி மீள் அபிவிருத்திக் கருத்திட்டம்
- பல்வேறுபட்ட தேவைகளுகாக நாளாந்தம் நகரத்திற்கு வரும் சுமார் 8,000 பொதுமக்களுக்கும் அதேபோன்று விழாக்காலங்களில் வருகை தரும் யாத்திரிகர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான வசதிகளுடன் மிஹிந்தலை நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகர மத்தியில் வர்த்தக கட்டங்கள் மற்றும் பொது சந்தையை நிருமாணிப்பதற்கும், கால்வாய் முறைமையை ஒழுங்குபடுத்துவதற்கும், சிறுவர் பூங்கா, பொது இடங்கள் உட்பட வாகன தரிப்பிடங்களை அபிவிருத்தி செய்வதற்கும் பாதை இருக்கைகளை நிருமாணிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 200 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள செலவில் 2016-2019 காலப்பகுதியில் மிஹிந்தலை நகர மத்தி மீள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.