2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அங்குனுகொலபலஸ்ஸ நகர அபிவிருத்தி நோக்கங்களுக்கு தேவையான காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல் - அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள நகரங்கள் ஒன்றோடு ஒன்றை இணைக்கும் பிரதேசத்தில் அமைந்துள்ள அங்குனுகொலபலஸ்ஸ நகரத்தை முறையான அபிவிருத்தி திட்டமொன்றின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுற்றுலா விடுதிகள் வங்கிக்கட்டடங்கள், வர்த்தக கட்டடத் தொகுதிகள், அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றுக்கான கட்டடங்கள், பொதுவாகனத் தரிப்பிட நிருமாணிப்பு மற்றும் நகர மத்திய பேரூந்து நிலைய அபிவிருத்தி போன்ற அபிருத்தி கருத்திட்டங்களுக்குத் தேவையான அங்குனுகொலபலஸ்ஸ நகரத்திலுள்ள ஏக்கர் 9, றூட் 2, பேர்ச்சர்ஸ் 10 விஸ்தீரணமுடைய மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |