2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய வடிவமைப்பு நிலையத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல் - உள்நாட்டு கைப்பணி கைவினைஞர்களின் மேம்பாட்டுக்காக செயற்படும் தேசிய வடிவமைப்பு நிலையமானது தற்போது தாபிக்கப்பட்டுள்ள கட்டடமானது 40 வருடங்களுக்கு மேல் பழைமைவாய்ந்த ஒன்றாகுமென்பதோடு, இந்த கட்டடம் சேதமடைந்த நிலையில் இருக்கின்றதன் காரணமாக தற்போதைய தேவைகளுக்கு அமைவாக நவீனமயப்படுத்துவதற்கு அல்லது மாற்றங்களைச் செய்வதற்கு முடியாத நிலையிலுள்ளது. இதற்கமைவாக, இந்த பழைய கட்டடத்தை உடைத்து அப்புறப்படுத்தி ஒவ்வொரு கைப்பணித் துறைக்கும் தேவையான வேலைத்தலங்கள், வடிவமைப்பு பிரிவுகள், நூலகம், கைப்பணி கண்காட்சி பிரதேசம், நிருவாக கிளை போன்றவற்றை உள்ளடக்கும் விதத்தில் தேவையான வசதிகளுடன் புதிய கட்டடமொன்றை 80 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |