• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலைஞர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- பல்வேறுபட்ட கலைத்துறைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் தொழில் ரீதியிலான அங்கீகாரத்தையும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் அவர்கள் சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்றை உருவாக்குவதற்காக 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வயதினை அடிப்படையாகக் கொண்டு புள்ளி வழங்கும் முறையொன்றின் மூலம் கலாசார திணைக்களத்தினால் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்றை இந்த ஆண்டிலிருந்து ஆரம்பித்து சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.