2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய தொழில் பாதுகாப்பு வாரம் - 2016 - தொழில் சார்ந்த சகல விதத்திலுமான விபத்துகளை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான தொழில் அணியொன்றை உருவாக்குவதன் மூலம் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு விசேட பங்களிப்பினை நல்கும் பிரதான நோக்கத்துடன் செயற்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் "தேசிய தொழில் பாதுகாப்பு வாரம்" 2016 ஒக்றோபர் மாதம் 07 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதிவரை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தடவை தேசிய தொழில் பாதுகாப்பு வாரத்திற்கு ஒருங்கிணைவாக தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய சருவதேச மாநாடொன்றையும் தேசிய மாநாடொன்றையும் நடாத்துவதற்கும் ஊழியர்கள் சார்பில் பாதுகாப்பான வேலை செய்யும் சூழலொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் வர்த்தக நிறுவனங்களை தெரிவுசெய்து மெச்சும் நோக்கில் "தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய சிறப்பு விருது வழங்கும் விழா" நடாத்தப்படவுள்ளது. இதற்கமைவாக இம்முறை "தேசிய தொழில் பாதுகாப்பு வாரமானது" தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றாகக் கருதி உரிய அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |