2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையிலான (கி.மீ. 60) மத்திய அதிவேகப் பாதையின் நான்காம் பகுதியின் நிருமாணிப்பு - ரஜரட்ட நவோதயா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 150 கிலோ மீற்றர் பாதையை புனரமைப்பதற்கும் 100 கிலோ மீற்றர் புதிய பாதையை நிருமாணிப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருநாகலிலிருந்து ஆரம்பித்து தம்புள்ளை வரை செல்லும் 60 கிலோ மீற்றர் நீளமான உத்தேச மத்திய அதிவேகப் பாதையின் நான்காம் பகுதியின் நிருமாணிப்புக் கருத்திட்டத்தை ரஜரட்ட நவோதயா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |