2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்டம் - கிழக்கு மாகாணத்தின் மூதூர், சேருவாவில, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை ஏற்பாடு செய்வதற்காக தாபிக்கப்பட்ட காவலரண்களாக செயற்பட்டு, பின்னர் 2004 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸ் நிலையமொன்றாக தாபிக்கப்பட்டதும் 155 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுமான தம்பலகாமம் பொலிஸ் நிலையம் தற்போது வாடகை அடிப்படையில் பிறப்பட்ட இரண்டு கட்டடங்களில் ஆகக்குறைந்த வசதிகளின் கீழ் நடாத்திச் செல்லப்படுகின்றது. இதற்கமைவாக மிகச் சிறந்த பொதுமக்கள் சேவையொன்றை நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இந்த பொலிஸ் நிலையத்துக்கு புதிய கட்டடமொன்றை 90.4 மில்லியன் ரூபாவொன மதிப்பிடப்பட்ட செலவில் பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியொன்றில் நிருமாணிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |