• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனசீவராசிகள் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் அது தொடர்புபட்ட சருவதேச சமவாயங்கள் மற்றும் அதுசார்ந்த செயற்பாடுகளை இலங்கையில் அமுல் படுத்துதலும் ஒழுங்கு முறைப்படுத்துதலும்
- இலங்கை ஏற்கனவே வனசீவராசிகள் பாதுகாப்பு தொடர்பிலான சருவதேச சமவாயங்கள் பலவற்றில் கைச்சாத்திடப்பட்டிருந்த போதிலும் குறித்த சமவாயங்கள் சம்பந்தமாக செயற்பாடுகளை மிக முறையாக மேற்கொள்ளும் பொருட்டு திட்டவட்டமான சட்ட ஏற்பாடுகள் செய்யவில்லை. இதற்கமைவாக இலங்கை கைச்சாத்திட்டுள்ள "அருகிவரும் வனவிலங்குகள் மற்றும் விசேட தாவரங்கள் பற்றிய சருவதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயம்" மற்றும் இயைபுள்ள செயற்பாடுகள் அடங்கலாக இலங்கையினால் கைச்சாத்திடப்பட்டுள்ள வனவுயிர் பாதுகாப்புக்குரிய சருவதேச சமவாயங்களின் உள்நாட்டில் நடைமுறைப்படுத்து வதற்குத் தேவையான ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கு இயலுமாகும் வகையில் விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.