• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபிவிருத்திக் கொள்கைக் கடன் (தனியார்துறை அபிவிருத்தி, ஆளுகை மேம்பாடு மற்றும் நிதித் திரட்டு)
- இலங்கையில் நிதி நிலைமையின் நிலையான தன்மை, அரசாங்க வளங்களின் முகாமைத்துவத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் தனியார்துறையின் போட்டிகரமான நிலைமை என்பவற்றின் ஊடாக இலங்கையின் பொருளாதாரம் நிலைபேறுடைய தன்மையை அடைதல் என்பவற்றுக்கு கவனம் செலுத்தி அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியளிப்பதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு 10,000 மில்லியன் யப்பான் யென்களை (அண்ணளவாக 14,453.2 மில்லியன் ரூபா) கொண்ட அபிவிருத்திக் கொள்கை நிதியை நாட்டிற்கு நலன்பயக்கும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றல் பத்திரங்கள் கைச்சாத்திடுவதற்கும் இந்த நோக்கத்திற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.