• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் - இலங்கை ஒன்றிணைந்த ஒத்துழைப்பு செயலகத்தை கொழும்பிலும் டோக்கியோவிலும் தாபித்தல்
- 2015 ஒக்ரோபர் மாதத்தில் மாண்புமிகு பிரதம அமைச்சரினால் யப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உயர் தரத்திலான கமத்தொழில், கைத்தொழிலுக்கான விஞ்ஞான மற்றும் தொழினுட்பம், உயர் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள், பிரதேச அபிவிருத்தி, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி, சிவில் பாதுகாப்பு மற்றும் காப்பு போன்ற துறைகளை தழுவும் விதத்தில் யப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்கங்களினால் கூட்டு ஒத்துழைப்பினை வௌிப்படுத்தவதற்கு உடன்பாடு காணப்பட்டது. இதற்கமைவாக, இதன் சார்பில் வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்குடன் யப்பான் - இலங்கை ஒன்றிணைந்த ஒத்துழைப்பு செயலகத்தை கொழும்பிலும் டோக்கியோவிலும் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.