2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II - 1,000 கைதிகளுக்கு இடவசதிகளை ஏற்பாடு செய்யக்கூடிய விதத்தில் யாழ்ப்பாணம் பண்ணை சிறைச்சாலை கட்டடத்தொகுதி நிருமாணிப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டத்திற்கான நிருமாணிப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, 130 கைதிகளுக்கு இதன் மூலம் இடவசதி வழங்கலாம். இதன் இரண்டாம் கட்ட நிருமாணிப்புப் பணிகள் 623.32 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள செலவில் ஆரம்பிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |