2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முதலீட்டுச் சபையின் மூன்று வலயங்களிலும் கம்பஹா மாவட்டத்தின் பியகம, கிரிந்திவெல மற்றும் ரன்பொக்குனுகம அண்மித்த பிரதேசங்களிலும் காலி மாவட்டத்தின் கொக்கல பிரதேசத்திலும் குறுகியகால முன்னுரிமை நீர்வழங்கல் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - பியகம, வத்துபிட்டிவல, கொக்கல ஆகிய முதலீட்டு சபை வலயங்களிலும் பியகமவுக்கு அண்மித்த ஏனைய பிரதேசங்களிலும் ரன்பொக்குனுகம, கிரிந்திவெல மற்றும் ஹபராதூவ ஆகிய பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களுக்கு போதுமான குடிநீர் வசதிகள் வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்கு இந்த பிரசேதங்களில் தற்போது நிலவும் நீர்வழங்கல் திட்டங்களுக்கு செய்யப்பட வேண்டிய விருத்திப் பணிகளை தேசிய முன்னுரிமை கருத்திட்டமொன்றாகக் கருதி 1,531.9 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் செய்யும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |