2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முத்துராஜவெலயிலுள்ள 10 ஏக்கர் காணியை திண்ம கழிவுப் பொருள் மூலம் வலுசக்தி உற்பத்தி செய்யும் கருத்திட்டமொன்றுக்காக குத்தகைக்களித்தல் - திண்மக் கழிவு அப்புறப்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வொன்றாக திண்மக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக முத்துராஜவெல பிரதேசத்திலுள்ள இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 30 வருட கால குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனியொன்றுக்கு குத்தகைக்களிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: |