• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஊடக மத்திய நிலையத்தை தாபித்தல்
- இராஜதந்திர செயற்பாடுகளின் போது முழு நிறைவான, நம்பத் தகுந்த, பிழையற்ற உத்தியோகபூர்வ தகவல்களை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகுமென்பதோடு, அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மற்றுமொரு நடவடிக்கையொன்றாக நல்லாட்சியின் மூலத் தத்துவங்களை மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் கொள்கை ஆக்கத்துக்காக பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக் கொண்டு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வழங்கியும் தகவல்களை ஒருங்கிணைத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் வெ ளிப்படுத்துநராக செயலாற்றும் "தேசிய ஊடாக மத்திய நிலையம்" ஒன்றைத் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.