• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் தாழ் அபிவிருத்தி பிரதேசங்களில் பாதைகளை நிருமாணித்தல்
- மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காகவும் அதேபோன்று இந்தக் கருத்திட்டத்தின் முழுமையான நலன்களைப் பெற்றுக் கொள்வதற்குமாக இந்த நீர்தேக்கங்களுக்கு தாழ்வாக அமைந்துள்ள பிரதேசங்களின் நீர்ப்பாசன மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது மிகமுக்கியமானதாகும். இதற்கமைவாக அத்தியாவசிய பாதைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக மொரகஹகந்த - வெல்லவெல வீதி (கி.மீ.6.37), அக்போபுர ஊடாக மெதிரிகிரிய - கந்தளாய் வீதி (கி.மீ.8.5) மற்றும் புதிய லக்கல நகரத்திற்குள் வீதிகளை நிருமாணித்தல் (மேற்பரப்பிடுதல்) போன்றவற்றுக்கான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.